ஆஞ்சநேயருக்கு சாதி சான்றிதழ் கேட்டு ஆட்சியாளரிடம் மனு


உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முன்னணி அரசியல்வாதி ஒருவர் ஆஞ்சநேயருக்கு சாதி சான்றிதழ் கேட்டு வாரணாசி மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

 

ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல் பரப்புரை நடைபெற்றபோது, “ராமனுக்காக ஓய்வின்றி உழைக்க வேண்டி முடிவெடுத்த ஆஞ்சநேயர் ஒரு தலித். வாக்களர்களும் அவரைப்போல முடிவெடுக்க வேண்டும். ராமர் பக்தர்கள் பாஜக-வுக்கு வாக்களியுங்கள். ராவணனை பின்பற்றுபவர்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்கட்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், என்று பேசினார்.

 

இதற்கு எல்லா தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

 

கடவுளை சாதி ரீதியாக பிரிக்கும் வேலையை பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தொடங்கிவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.

 

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பேச்சு ஆஞ்சநேயர் பக்தர்களை காயப்படுத்திவிட்டதாக பல இந்து மத தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.

 

இந்த விவகாரத்தில் மேலுமொரு சாச்சையை தேசிய பழங்குடியின தலைவர் நந்த் கிஷோர் சாய் கிளப்பிவிடடுள்ளார். .

 

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலயாம் சிங் யாதவின் தம்பி சிவபால் சிங் ’பிரகதிசீல் சமாஜ்வாடி’ என்ற கட்சியின் தலைவராக உள்ளார்.

 

இவர் ஆஞ்சநேயருக்கு சாதி சான்றிதழ வழங்கக் கோரி விண்ணப்பம் செய்துள்ளார்.

 

ஆஞ்சநேயரின் தந்தை மகராஜ் கேசரி, தாயார் அஞ்சனா தேவி, அவர் பிறந்தது வாரணாசி சங்கத் மோச்சன், அவரது வயதை அளவிட முடியாது. எனவே பிறந்த வருடம் கண்டுப்பிடிக்க முடியாது என்றும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வாக்கு வங்கிகளை பலப்படுத்தி கொள்ள, மக்கள் பணிகள் செய்வதை விட்டுவிட்டு, மத வெறிதனை தூண்டுகின்ற பணியை பாஜக செவ்வனே செய்து வருவதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Add new comment

4 + 11 =