சிறப்பு நற்செய்தி அறிவிப்பு மாதச் செபம்

விண்ணகத் தந்தையே, இறைவா/
உம் ஒரே பேறான திருமகன்/ எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
இறந்து உயிர்தெழுந்தபின்/
“நீங்கள் போய், எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்று/
தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்./
நாங்கள் பெற்ற திருமுழுக்கின் வழியாக/
திரு அவையின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் பங்காளர்களாகிறோம் என்பதை/
எங்களுக்கு நினைவூட்டுகின்றீர்./
நற்செய்திக்குச் சான்று பகர்வதற்காக/
நாங்கள் துணிவும் ஆர்வமும் கொண்டு விளங்குமாறு/
தூய ஆவியாரின் கொடைகளால் எங்களை வலுப்பத்தியருளும்./
இதனால் /
திரு அவையிடம் ஒப்படைக்கப்பட்டு/
இன்னும் முழுமை பெறாத இந்நற்செய்திப் அறிவிப்புப்பணி/
உலகிற்கு வாழ்வும் ஒளியும் கொணரும் வண்ணம்/
புதிய பயனுள்ள முறைகளில் ஆற்றப்படுவதாக./
எல்லா மக்களும்/
இயேசு கிறிஸ்துவின் மீட்பளிக்கும் அன்பையும் / இரக்கத்தையும்/
உய்ர்த்துணர்வதற்கு/
நாங்கள் கருவிகளாக விளங்கிட அருள்வீராக./
உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில்/
என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற/
அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்/ ஆமென்.

 

Add new comment

6 + 3 =