சபரிமலையில் 144 தடை உத்தரவு


சபரிமலை கோயில் நடை சிறப்பு பூஜைக்காக திறந்த நிலையில் அங்கு நவம்பர் 6-ம் தேதி வரை, பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

 

சபரிமலை, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், பெண்களை அனுமதிக்க கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கவில்லை.

 

கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப் பட்டனர்.

 

பதற்றமான சூழலில், சபரிமலை ஐயப்பன் கோயில் திறந்து இருந்த 5 நாட்களும் பம்பை, நிலக்கல், சபரிமலையில் பதற்றம் நிறைந்து காட்சியளித்தது. பெண்கள் இறுதி வரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

 

இந்த நிலையில் ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

Add new comment

6 + 4 =