கண்ணீருக்குள் மகிழ்ச்சியை பதியவைக்கும் கிறிஸ்துமஸ்!!! 

இயேசு பிறப்பின் காலம் திகைக்க வைக்கும் ஆச்சரியத்தைக் கொண்டுவரும் காலம். வீடு இல்லாத ஜெர்ரி என்ற பெண்மணியின் குடும்பம். இந்த பெண் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் ஒரு கம்பின் உதவிகொண்டு நடக்கிறார். இவருக்கு கணவன் பிள்ளைகள் சோர்த்து 3 பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள். கிறிஸ்து பிறப்பு பரிசாக குளிரிலிருந்து பாதுகாக்கும் கம்பளி போர்வைகளை வாங்கலாம் என்று கடைக்குச் சென்று வாங்க முடியாமல் தவித்துநின்றபோது, பாக்ஸ் 5 ஆச்சரியப்படுத்தும் அணி அங்கு சென்றார்கள்.

அவர்கள் வாங்கும் அனைத்திற்கு பணம் செலுத்துவதாகச் சொன்னபோது, அதிர்ந்து போனாhர்கள். கண்ணீரோடு அழுதார்கள். ஆனந்தத்தால் குதித்தார்கள். மகிழ்ச்சியான கிறிஸ்து பிறப்பு என்று கத்தினார்கள்.

இந்த கிறிஸ்துபிறப்புக் காலத்தில், உங்களால் யாருடைய கண்ணீரையாவது துடைக்கமுடியுமென்றால், உங்கள் கண்ணீரும் துடைக்கப்படும். 

உங்கள் முயற்சி எதுவும் முடிவுறவில்லை. கடவுள் எல்லாவற்றையும் நடத்திக்காட்டுவார். இப்பொழுது உள்ளதுபோல எப்பொழுதும் உணரலாம் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும்.

Add new comment

12 + 5 =