அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer


https://youtu.be/FJS6bMb93b4

அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள் - திருப்பாடல்கள் 149:1. அல்லேலூயா என்று சொல்கிறோம். இது தமிழ் சொல்லல்ல. எபிரேய சொல். அல்லேலூ +  யா என்ற இரு சொற்களாகும். அல்லேலூ என்பது  துதியுங்கள் எனவும்,  யா என்பது யாவே அதாவது தேவன் எனவும் பொருள்படும். ஆகவே அல்லேலூயா என்பது ஆண்டவரை துதியுங்கள் என்பதாகும். அல்லேலூயா என்ற வார்த்தை விவிலியத்தில் 28 இடங்களில் இடம் பெற்றுள்ளது. திருப்பாடலில் 24 முறையும் திருவழிபாட்டில் நான்கு முறையும் இடம் பெற்றுள்ளது.

ஆண்டவருடைய நன்மைகளை நினைத்து நினைத்து நாமும்  ஒவ்வொரு நாளும் துதிக்கலாமே. உண்ண உணவு கொடுத்ததற்காக துதிப்போம். உடுக்க உடை கொடுத்ததற்காக துதிப்போம். இருக்க இடம் கொடுத்ததற்காக துதிப்போம். நாசியில் சுவாசத்தை கொடுத்ததற்காக துதிப்போம். நேசிக்க சில உறவுகளை கொடுத்ததற்காக துதிப்போம்.  

உடனிருக்க வானதூதர்களை கொடுத்ததற்காக துதிப்போம். தேவைக்கு பணம் கொடுத்ததற்காக துதிப்போம். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் தம் உயிரை கொடுத்ததற்காக துதிப்போம்.  நம்மை பாவத்திலிருந்து மீட்டதற்காக துதிப்போம். அவருடைய தன்னிகரற்ற அன்புக்காக துதிப்போம். 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

 பகவன் முதற்றே உலகு.

உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

ஜெபம்: வைகறையில் உம்மை துதிக்கிறோம். பத்து நரம்பு வீணையினால் உம்மை பாடுகிறோம். உமது நன்மைகளை நினைத்து உம்மை துதிக்கிறோம். படைப்புகள் அனைத்துடனும் உம்மை துதிக்கிறோம். அல்லேலூயா ஆமென்.

Add new comment

17 + 0 =