Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
நடுவானில் விமானத்தில் இருந்து புகை- பரபரப்பு
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் என்ஜினில் புகை வெளிவந்தால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங்கின் கதே டிராகன் நிறுவனத்துக்கு சொந்தமான kA45 விமானம் ஒன்று தைவானில் உள்ள கோ என்ற நகரில் இருந்து ஹாங்காங்குக்கு உள்ளூர் நேரப்படி பகல் 8.2 மணிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
விமானத்தில் 317 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் வலது என்ஜினில் புகை வருவதைக் கண்டு பிடித்தார் விமானி.
இதையடுத்து உடனடியாக விமானி, கோசியுங் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.பரபரப்பான விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக தரை இறங்கும் அறிவுறுத்தி உள்ளார்.
பின்னர் தைவான் ஜலசந்தியில் விமானத்தில் இருந்த எரிபொருளை கொட்டிவிட்டு,தேவையான எரிபொருளுடன் விமானத நிலையத்துக்கு அந்த விமானம் திரும்ப பத்திரமாக தரையிறங்கியது.
அங்கு தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தில் பறவை மோதியதால் என்ஜினில் புகை வெளியாகி இருக்கும் என கூறப்படுகிறது. பிறகு பயணிகள் விமானம் வேறு மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Add new comment