திருத்தந்தையின் மேய்ப்புப்பணி பயணம்: புனித ஜூலியோ ஆலயம்


an image of st.julio church. from yelp.com

ஏப்ரல் 7 வருகிற ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மோந்தேவெர்தே பகுதியில் அமைந்துள்ள புனித ஜூலியோ பங்குக்கோவிலுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று, மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

கடந்த மூன்று ஆடுகளாக அக்கோவில் புதுப்பிக்கப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, அங்கு நிறுவப்பட்டுள்ள புதிய பீடத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ச்சிப்பார் என்று இவ்வறிப்பு கூறுகிறது.

ஞாயிறு பிற்பகல் 3.45 மணிக்கு இப்பங்குக் கோவிலுக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த பங்கைச் சேர்ந்த பல்வேறு குழுக்களை, குறிப்பாக, அங்குள்ள நோயுற்றோரை சந்தித்தபின், கோவிலில் திருப்பலியை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருப்பலியில் வழங்கப்படும் காணிக்கை பொருள்கள், வீடற்றோர் பலருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று இந்த பங்கின் பொறுப்பாளர், அருள்பணி தாரியோ பிரத்தீனி (Dario Frattini) அவர்கள் கூறியுள்ளார்.

1956ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பங்குக் கோவில், 2015ம் ஆண்டு பழுதடைந்ததால், கடந்த மூன்றாண்டுகளாக புதுப்பிக்கப்பட்டு வந்தது என்றும், புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தையும், புதிய பீடத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ச்சிப்பார் என்றும், பங்கு அருள்பணியாளர் கூறினார்.

நன்றி வத்திக்கான் செய்தி 

Add new comment

3 + 10 =