பனை விடிலி - சி.கணேசன் | எழுத்தாளர் சசிதரன் | புத்தக விமர்சனம் | Book Review


Psalm Tree

இந்த புத்தகத்தின் பெயரையோ அல்லது எழுத்தாளரின் பெயரையோ இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை. விடிலி என்பதற்கு என்ன அர்த்தமென்று எனக்கு தெரியாது. நூலகத்தில் இருந்து எடுத்து வந்தவுடன் படிக்க ஆரம்பித்தேன். என்னை கணேசன் மற்றொரு உலகத்திற்கே கொண்டு சென்றுவிட்டார். வசித்து முடியும் வரை எதோ இனம்புரியாத மகிழ்ச்சி. 

பாதி படித்தவுடன் அப்பாவிடம் "விடிலி" என்றால் என்ன என்று கேட்டேன். அப்பா அதற்கு பதநீர் காய்ச்சும் பனை குடிசை என்றார். எங்களின் பூர்விகம் கன்னிராசபுரம் அங்கு எங்கு பார்த்தாலும் பனை மரங்கள்தான் சிறு வயதில் பார்த்த ஞாபகம்.இந்த நாவல் நாடார் சமூகத்தின் வளர்ச்சியைப் பற்றியது. ஒரு குடும்பத்தின் கதை சிறுவனின் பார்வையில் விரிகிறது. அவன் பள்ளியில் சேர்வதிலிருந்து தொடங்குகிறது. அவன் எல்லோருக்கும் பிடித்தவனாகிறான். ஆசிரியர் மாணவன் உறவை மிக நேர்மையாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர். 

அவனின் முதல் நண்பர்கள், முதல் மரணம், முதல் தொழில், முதல் காதல் என அனைத்தையும் nostalgic உணர்வோடு சொல்லியிருக்கிறார் ஆசிரியர். சாதிய வேறுபாடுகளும் கட்டுப்பாடுகளும் அவனின் அனைத்திலும் வெளிப்படுகிறது. அவன் வளர வளர அவன் குடும்பமும் செழிப்படைகிறது. அதற்கு அவர்களின் கடின உழைப்புதான் முக்கிய காரணம். எந்த தொழிலாக இருந்தாலும் அதை  ஆர்வமுடன் செய்தார்கள். இவன் மட்டுமே அந்த குடும்பத்தில் படிக்கிறான். 

ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கவிதையோடு தொடங்குகிறது. அதுவே அந்த அத்தியாயத்தின் போக்கை முடிவு செய்கிறது. 1940,1950 காலகட்டத்தைக்  கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஆசிரியர். கதைசொல்லியின் குடும்பம் திருச்செந்தூர் செல்லும் பகுதியின் விவரிப்பு அற்புதம். நாமும்  அவர்களோடு பயணிக்கிறோம். 
நான் ரசித்து வாசித்த புத்தகம்.

இந்த புத்தக விமர்சனத்தைப் படித்தவுடன் புத்தகமே படித்த ஒரு உணர்வு என்று சொல்லும் அனுபவத்தைக் கொடுக்கக்கூடியவர் சசிதரன். இவர் எளிமையாகவும் ஆழமுடனும் அர்த்ததோடும் பாங்குடனும் எடுத்துக்கூறும் உணர்திறன் கொண்டவர்.

எழுத்தாளர் சசிதரன்

Add new comment

6 + 10 =