இறைவின் மாபெரும்  இரக்கத்தினுள்

இறைவின் மாபெரும்  இரக்கத்தினுள் நம்மை பொதிந்து கொள்வோம். இறை இரக்கச் செபம் ஒவ்வொரு நாளும் காலை 3 மணி,  மதியம் 3 மணி.
 

தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமென்.
 

தொடக்கச் செபம்

இயேசுவே நீர் மரித்தீர். ஆனால் உமது மரணம் ஆன்மாக்களின் ஊற்றாகவும், இரக்கத்தின் கடலாகவும் திறக்கப்பட்டது. 

ஓ வாழ்வின் ஊற்றே, ஆழம் காணமுடியாத இறைவனின் இரக்கமே. அகில உலகையும் அரவணைத்து, உமது இரக்கம் முழுவதையும் எம்மீது பொழிந்தருளும்.
 

மனவல்லபச் செபம்

இயேசுவின் திருஇதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே, தண்ணீரே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
(3 முறை)

 

இயேசு கற்பித்த செபம்

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பதுபோல, எங்கள் குற்றங்களை மன்னியும். 
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

 

மங்கள வார்த்தை செபம்

அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. புனித மரியே! இறைவனின் தாயே! பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும்! ஆமென். 3 முறை 
 

நம்பிக்கை அறிக்கை

விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். 
இவர் தூய ஆவியால் கருவுற்று, கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். 
பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். 
அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித, கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்.

 

பெரிய மணிகளில்

நித்திய பிதாவே, எங்கள் ஆண்டவரும் உமது நேச மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும், ஆன்மாவையும், தெய்வீகத்தையும் எங்கள் பாவங்களுக்காகவும்,
அகில உலகின் பாவங்களுக்காகவும் பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். 

 

சிறிய மணிகளில்

இயேசுவின் வேதனை நிறைந்த பாடுகளின் வழியாக எங்கள் மீதும் அகில உலகின் மீதும் இரக்கமாயிரும். (10 முறை)

 

முடிவில்

புனித இறைவா, புனித எல்லாம் வல்லவரே, புனித நித்தியரே எங்கள்மீதும் அகில உலகின்மீதும் இரக்கமாயிரும். (3 முறை)

 

இறுதிச்செபம்

மகா தயை நிறைந்த இறைவா! இரக்கத்தின் தந்தையே, ஆறுதலின் தேவனே, உம்மீது விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள்மீது இரக்கம் கொண்டீரே. உமது அளவற்ற இரக்கத்தைக் குறித்து எங்கள் பேரில் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் எல்லாச் சோதனைகளிலும் உமக்குப் பிரமாணிக்கமாயிருக்க உமது இரக்கத்தின் அருள்கொடைகளை எங்கள்மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும், எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து இவற்றை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
 

தமதிரித்துவச் செபம்

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மாட்சி உண்டாவதாக. தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
 

இரக்கத்தின் ஆண்டவர் உங்கள்மீது தன்னுடைய இரக்கத்தின் கதிர்களை நிறைவாய் அளித்து உங்கள் வாழ்வை நிறைவுசெய்வாராக.

 

Facebook: http://youtube.com/VeritasTamil

Twitter: http://twitter.com/VeritasTamil

Instagram: http://instagram.com/VeritasTamil

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil

Website: http://www.RadioVeritasTamil.org

Blog: http://tamil.rvasia.org

**for non-commercial use only**

 

Add new comment

4 + 6 =