இறந்து கரை ஒதுங்கிய தாய் திமிங்கலம் வயிற்றில் இருந்த சோகம்


பிளாஸ்டிக் ஒழிப்போம்

இத்தாலியில் உள்ள கடற்கரை ஓரத்தில் கர்ப்பமாக இருந்த திமிங்கலம் சடலமாக கிடந்த நிலையில் அதன் வயிற்றில் 22 கிலோ எடை உடைய பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

proto cervo பகுதியில் உள்ள கடற்கரையில் பெண் திமிங்கலம் கரை ஒதுங்கியது.

திமிங்கலம் உயிரிழந்திருக்கலாம் என மக்கள் கருதிய நிலையில் அதை வாகனம் மூலம் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு திமிங்கலம் இறந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனையில் அது கர்பமாக இருப்பது தெரியவந்தது.

மேலும் திமிங்கலம் பயிற்சி சோதித்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அதன் வயிற்றுக்குள் 22 கிலோ அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்துள்ளது.

இதன் காரணமாக உணவுகளை சாப்பிட முடியாமல் திமிங்கலம் இறந்தது தெரியவந்துள்ளது.

அதாவது, பிளாஸ்டிக் தட்டுகள், மீன்பிடிக்கும் வலைகள், சாக்குப் பைகள் போன்றவை வயிற்றில் இருந்தது.

திமிங்கலம் உணவு சாப்பிடாததன் காரணமாக வயிற்றிலிருந்து குட்டியும் சரியான வளர்ச்சி அடையவில்லை.

இதனிடையில் கடல்களை குப்பை கிடங்காக மக்கள் நினைப்பதை நிறுத்தாவிட்டால் இதுபோல கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

 

 

 

Add new comment

16 + 4 =