Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
கண நேரம் நில்லாது கடவுளின் சினம்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தவக்காலம் முதல் வாரம் புதன்
I: யோனா: 3:1-10
II : திபா 51: 1-2. 10-11. 16-17
III: லூக்: 11: 29-32
ஒரு தாயானவள் கஷ்டப்பட்டு வேலைசெய்து வீட்டிற்குத் தேவையான பொருட்களையெல்லாம் வாங்கிவந்தார். அப்போது வீட்டிலே அவருடைய மகன் பந்து எறிந்து விளையாடிக்கொண்டிருந்தான். தீடீரென அப்பந்து அவர் வாங்கியிருந்த பொருட்கள் மீது பட்டு பையோடு சரிந்து விழுந்தன. முட்டைகள் உடைந்தன. எண்ணெய் கீழே சிந்தியது. காய்கறிகள் உருண்டோடி அவற்றுள் சில அருகில் உள்ள சாக்கடையில் விழுந்தன. அந்தத் தாய்க்கு அப்படி ஒரு கோபம். கோபத்தில் தன் மகனை நோக்கி " உனக்கு இந்த வாரம் முழுதும் உணவு கிடையாது " என்று திட்டியவாறே அறைக்குள் கோபமாய் சென்று அமர்ந்தார். அப்போது அவருடைய மகன் தான் சேமித்து வைத்த சிறு தொகையை எடுத்துக்கொண்டு அம்மாவிடம் சென்று," அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்" என்று கூறி தன் சேமிப்புப் பணத்தைக் கொடுத்தான். தன்மகனின் அவ்வார்த்தைகளைக் கேட்ட உடனே அவர் கோபம் தணிந்தது. அத்தாயானவள் அவனை அணைத்து முத்தமிட்டு, உணவு சமைக்கச் சென்றார்.
அன்புக்குரியவர்களே தாய்க்குக் கூட கோபம் சில காலம் இருக்கலாம். ஆனால் நம்மைப் படைத்த கடவுளுக்கு ஒரு கணம் கூட கோபம் கிடையாது.அப்படி அவர் கோபப்பட்டால் அதை தாங்குவதற்கு நம்மால் இயலாது. கடவுள் கருணையும் இரக்கமும் உள்ளவர். நாம் எத்தகைய தீங்கு செய்பவர்களாக இருந்தாலும், மனம்மாறி அவரிடம் திரும்பி வரும்போது அவர் மனம்மாறி நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வார்.
இன்றைய முதல்வாசகம் மேற்கூறிய கருத்தை நமக்கு ஆழமாக எடுத்துக்கூறும் சிறந்த உதாரணமாக இருக்கிறது. நினிவே நகரமக்கள் யோனா இறைவாக்கினர் அறிவித்த செய்தியைக் கேட்ட உடனே தங்கள் பாவங்களை விலக்கி சாக்கு உடை அணிந்து சாம்பல்மேல் அமர்ந்து கடவுளின் இரக்கத்தைப் பெற நோன்பிருந்தனர். அவர்களின் இந்த மனமாற்றம் வரவிருந்ததாக அறிவிக்கப்பட்ட கடவுளின் சினத்தை மாற்றி புதுவாழ்வை அவர்களுக்கு வழங்கியது. இந்நிகழ்வில் நினிவே மக்களின் மனம்மாற்றம் மட்டுமல்லாமல் கடவுள் தங்களுக்கு இரங்குவார் என்ற அவர்களுடைய எதிர்நோக்கும் கடவுளின் கோபத்தை கணத்தில் மாற்றியது என நம்மால் உணரமுடியும்.
ஆம். நம்முடைய மனமாற்றம் கடவுளுடைய மனதை மாற்றும் ஆயுதம். அவருடைய கோபத்தை நொடிப்பொழுது கூட நீடிக்கவிடாது. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசு மனமாற மறுத்து இயேசுவை நம்பிட அடையாம் கேட்ட யூதர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தருகிறார். யோனா நினிவே மக்களுக்கு மனமாற்றத்தின் அடையாளமாய் இருந்தார். அவ்வாறே இயேசுவும் தன் போதனைகள் ,வல்ல செயல்கள் , வழியாக மனமாற்றத்தின் அடையாளமாய் விளங்கினார். ஆனால் யூதர்கள் அதை உணரவில்லை.
நாமும் யூதர்களைப்போல அல்லாமல் நினிவே நகர் மக்களைப் போல நாம் செய்கின்ற தீச்செயல்களை விலக்கி மனம்வருந்தி நோன்பிருக்க முயற்சி செய்வோம். அவை நம் கடவுளின் மனதையும் சினத்தையும் நொடிப்பொழுதில் மாற்றிவிடும்.
இறைவேண்டல்
இரக்கத்தின்இறையே! உம்மிடம் மனமாறித் திரும்பிவந்து உம் மன்னிப்பையும், இரக்கத்தையும் பெறுபவர்களாக எமை மாற்றும். ஆமென்.
தவக்காலம் முதல் வாரம் புதன்
மு.வா: யோனா: 3:1-10
ப.பா : திபா 51: 1-2. 10-11. 16-17
ந.வா: லூக்: 11: 29-32
கண நேரம் நில்லாது கடவுளின் சினம்!
ஒரு தாயானவள் கஷ்டப்பட்டு வேலைசெய்து வீட்டிற்குத் தேவையான பொருட்களையெல்லாம் வாங்கிவந்தார். அப்போது வீட்டிலே அவருடைய மகன் பந்து எறிந்து விளையாடிக்கொண்டிருந்தான். தீடீரென அப்பந்து அவர் வாங்கியிருந்த பொருட்கள் மீது பட்டு பையோடு சரிந்து விழுந்தன. முட்டைகள் உடைந்தன. எண்ணெய் கீழே சிந்தியது. காய்கறிகள் உருண்டோடி அவற்றுள் சில அருகில் உள்ள சாக்கடையில் விழுந்தன. அந்தத் தாய்க்கு அப்படி ஒரு கோபம். கோபத்தில் தன் மகனை நோக்கி " உனக்கு இந்த வாரம் முழுதும் உணவு கிடையாது " என்று திட்டியவாறே அறைக்குள் கோபமாய் சென்று அமர்ந்தார். அப்போது அவருடைய மகன் தான் சேமித்து வைத்த சிறு தொகையை எடுத்துக்கொண்டு அம்மாவிடம் சென்று," அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்" என்று கூறி தன் சேமிப்புப் பணத்தைக் கொடுத்தான். தன்மகனின் அவ்வார்த்தைகளைக் கேட்ட உடனே அவர் கோபம் தணிந்தது. அத்தாயானவள் அவனை அணைத்து முத்தமிட்டு, உணவு சமைக்கச் சென்றார்.
அன்புக்குரியவர்களே தாய்க்குக் கூட கோபம் சில காலம் இருக்கலாம். ஆனால் நம்மைப் படைத்த கடவுளுக்கு ஒரு கணம் கூட கோபம் கிடையாது.அப்படி அவர் கோபப்பட்டால் அதை தாங்குவதற்கு நம்மால் இயலாது. கடவுள் கருணையும் இரக்கமும் உள்ளவர். நாம் எத்தகைய தீங்கு செய்பவர்களாக இருந்தாலும், மனம்மாறி அவரிடம் திரும்பி வரும்போது அவர் மனம்மாறி நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வார்.
இன்றைய முதல்வாசகம் மேற்கூறிய கருத்தை நமக்கு ஆழமாக எடுத்துக்கூறும் சிறந்த உதாரணமாக இருக்கிறது. நினிவே நகரமக்கள் யோனா இறைவாக்கினர் அறிவித்த செய்தியைக் கேட்ட உடனே தங்கள் பாவங்களை விலக்கி சாக்கு உடை அணிந்து சாம்பல்மேல் அமர்ந்து கடவுளின் இரக்கத்தைப் பெற நோன்பிருந்தனர். அவர்களின் இந்த மனமாற்றம் வரவிருந்ததாக அறிவிக்கப்பட்ட கடவுளின் சினத்தை மாற்றி புதுவாழ்வை அவர்களுக்கு வழங்கியது. இந்நிகழ்வில் நினிவே மக்களின் மனம்மாற்றம் மட்டுமல்லாமல் கடவுள் தங்களுக்கு இரங்குவார் என்ற அவர்களுடைய எதிர்நோக்கும் கடவுளின் கோபத்தை கணத்தில் மாற்றியது என நம்மால் உணரமுடியும்.
ஆம். நம்முடைய மனமாற்றம் கடவுளுடைய மனதை மாற்றும் ஆயுதம். அவருடைய கோபத்தை நொடிப்பொழுது கூட நீடிக்கவிடாது. இன்றைய நற்செய்தி வாசகத்திலும் இயேசு மனமாற மறுத்து இயேசுவை நம்பிட அடையாம் கேட்ட யூதர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தருகிறார். யோனா நினிவே மக்களுக்கு மனமாற்றத்தின் அடையாளமாய் இருந்தார். அவ்வாறே இயேசுவும் தன் போதனைகள் ,வல்ல செயல்கள் , வழியாக மனமாற்றத்தின் அடையாளமாய் விளங்கினார். ஆனால் யூதர்கள் அதை உணரவில்லை.
நாமும் யூதர்களைப்போல அல்லாமல் நினிவே நகர் மக்களைப் போல நாம் செய்கின்ற தீச்செயல்களை விலக்கி மனம்வருந்தி நோன்பிருக்க முயற்சி செய்வோம். அவை நம் கடவுளின் மனதையும் சினத்தையும் நொடிப்பொழுதில் மாற்றிவிடும்.
இறைவேண்டல்
இரக்கத்தின்இறையே! உம்மிடம் மனமாறித் திரும்பிவந்து உம் மன்னிப்பையும், இரக்கத்தையும் பெறுபவர்களாக எமை மாற்றும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப் பங்குப்பணியாளர்
த.சூசையப்பர்பட்டணம் பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்
Add new comment