தாராளமாக கொடுப்பவரை கடவுள் விரும்புகிறார்! | குழந்தைஇயேசு பாபு | Daily Reflection


பொதுக்காலம் 19 ஆம்  செவ்வாய்; I: 2 கொரி 9: 6-10; II: தி.பா:  111:1-2,5-9; III: யோவான் 12 :24-26

தாராளம் என்றால் எதிர்பார்ப்பை விட அதிகமாக கொடுப்பது. இது தேவைப்படுபவருக்கு ஒரு பரிபூரண அல்லது தாராள மனதுடன் தம்மிடம் இருப்பதைக் கொடுக்கும் உயர்வான மனநிலையாகும்.  நம் கடவுள் மிகவும் தாராளமான கடவுள், அவர் தனது அன்பையும், இரக்கத்தையும், அருளையும் நமக்குத் தாராளமாகத் தந்தவர். தன் மகனையே கொடுக்கும் அளவிற்கு கூட செல்கிறார். அப்படிப்பட்ட கடவுளின் பிள்ளைகள்  தாராளமாக இருக்க வேண்டாமா?
 
நற்செய்தியில் இயேசு "தன் வாழ்க்கையை நேசிக்கும் எவரும் அதை இழந்து விடுவர்" என்று கூறுகிறார். இதன் பொருள் என்னவென்றால், சயநலத்துடன் நமக்காகவே நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்தால் நிச்சயம் அதை இழப்போம்.  நம் வாழ்வை, மகிழ்வை , பொருட்களை இல்லாதவருக்கு கொடுக்கும் அளவுக்கு  நாம் தாராளமாக இருக்க வேண்டும். புனித பிரான்சிஸ் அசிசி தனது அமைதிக்கான மன்றாட்டில் அது கொடுப்பதில் தான் நாம் பெறுகிறோம் என்று கூறுகிறார்.

நமது தாய் திருஅவை புனித லாரன்சின் நினைவைக் கொண்டாடுகிறது.
புனித லாரன்ஸ் திருத்தந்தை சிக்ஸ்டஸ்  காலத்தில் திருத்தொண்டராகப் பணியாற்றியவர். இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வது போல், அவர் நம்பிக்கையின் தானியங்களை உற்பத்தி செய்ய விதையாக இறந்தார்.

எனவே நம் அன்றாட வாழ்வில் தாராள மனத்தினராய் வாழ முயற்சி செய்வோம். நம்மிடம் இருப்பதை பிறர் எதிர்பார்ப்புக்கும் மேலாக கொடுத்து உதவுவோம். அப்பொழுது கடவுள் நம்மை எப்போதும் அன்பு செய்வார்.

இறைவேண்டல் 

அன்பு இறைவா! உம்மைப் போல தாராள மனத்துடன் வாழ அருள் தாரும். ஆமென்.

Add new comment

1 + 6 =