விண்ணகத் தந்தை என்றால் - October 9

இன்றைய நற்செய்தியில் இடம் வாசிக்கிறோம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடவுளை விண்ணக தந்தையே என அழைக்க கற்றுக் கொடுப்பதை விண்ணகத் தந்தை என்றால் கடவுளின் மக்களாகிய நாம் யார் அதாவது கடவுளின் மக்கள் யார்? பழைய ஏற்பாட்டில் கடவுளின் கட்டளைகளை கடைபிடித்து வாழ்பவர்கள்  கடவுளின் மக்கள் எனப்பட்டார். 

புதிய ஏற்பாட்டிலும் அதேதான் மாற்றம் இல்லை. ஆனால் கடவுளின் கட்டளை அன்புக்கட்டளை என்பதை பழைய ஏற்பாடு வெளிப்படுத்தியதை மக்கள் காணத்தவறியதி  புதிய ஏற்பாடு சொல்லி அதை நாம் வாசிக்கின்றோம். இன்றைய முதல் வாசகத்தில் யோனா நினிவே நகரை ஆண்டவர் அழிக்க வேண்டுமென்று எதிர்பார்த்திருந்தபோது இடது கையை வலது கை எது என்று அறியாத மக்களையும் அவர்களுடைய கால்நடைகளையும் நான் அழிக்க மாட்டேன், நான் இரக்கமானவர் என்று கடவுள் சொல்வதை அறிந்து இருக்கின்றோம்.

கடவுளின் மக்கள் நாம் என்றால் அவரின் அன்பை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். இதைத்தான் எங்கள் தந்தையே என்கின்ற செபம் சொல்கின்றது. இதுவே அவரின் அரசாட்சி அவருடைய அன்பை வெளிப்படுத்துவது; அந்த அன்பை எல்லோரும் கடைபிடிக்க செய்வது;  அவருடைய மக்களாய் நாம் இருப்பது மட்டுமல்ல பிறரையும் அவருடைய மக்களால் இருக்கச் செய்வதே இன்றைய நற்செய்திப் பணியின் சவால்.

Add new comment

2 + 8 =