அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

இயேசு மறுமொழியாக, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது - மத்தேயு 15:28. கனானிய பெண்இயேசுயவிடம்  தன் மகளை குணமாக்க வேண்டும் என்று கேட்கிறார். அந்த அம்மாவுடைய  ஆழமான விசுவாசத்தை அறிந்த இயேசு, அவரை அவமானப்படுத்துவதற்காகவோ , அவரை கீழானவர் என்று சொல்வதற்ககவோ அல்ல. அந்த அம்மாவுடைய அசைக்க முடியாத விசுவாசத்தை எல்லாருக்கும் வெளிப்படுத்த நினைத்துதான்  குழந்தைகள் உண்ணும் உணவை நாய்களுக்கு போடலாமா  என்று  கேட்கிறார். 

அந்த அம்மாவும், ஆண்டவரே குழந்தைகள் சாப்பிடும்போது  கீழே விழும் சாப்பாட்டை நாய்கள் சாப்பிடும் தானே, தான் அவமானப்பட்டாலும் பரவாயில்ல ஆண்டவர் குணமாக்குவார், கீழே விழுகிற துண்டு அளவாயிருந்தாலும் ஆண் டவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தையே பெரிய ஆசீர்வாதம் என நினைக்கிறார். உடனே இயேசு அம்மா, உன் நம்பிக்கை பெரிது. நீர் ஆசைப்பட்ட படியே உனக்கு ஆகட்டும் என்கிறார். அந்த அம்மாவுடைய மகளும் அந்த நிமிடமே குணம் ஆகிறார்.

ஆண்டவர் நம்முடைய மனதை பார்க்கின்ற இறைவன். நாம் நினக்கிறதற்கும் வேண்டுவதற்க்கும் முன்பாகவே நமக்கு என்ன தேவை என்று தெரிந்தவர். சில சமயங்களில் நம்மை சோதிக்க அல்லது நம் விசுவாசத்தை எல்லாருக்கும் வெளிப்படுத்த நினைத்து  நாம் கேட்டதை கொடுக்காமல் வேறு ஏதாவது செய்வார். உடனே நம் விசுவாசம் மாறிப்போகிறது. அப்படியல்ல ஆண்டவர் நம்மை அதிகமாக  நேசிக்கிறார் , நமக்கு நல்லது தான் செய்வார் கெட்டது செய்ய மாட்டார் என்று நம்ப வேண்டும்.  நம்பி அவருடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும் இன்னும் அதிகமாக பெற முயற்சி செய்யவேண்டும்.

ஜெபம்: ஆண்டவரே உம்மீது அசைக்க முடியாத முழு நம்பிக்கை கொண்டு, உம் வாயின் வார்த்தைகளால், நான் ஜெயம் கண்டு வாழ வரம் தாரும்.
 

Add new comment

1 + 11 =