அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம் - 1 கொரிந்தியர் 12:13. திருமுழுக்கின் மூலம் நாம் எல்லாரும் ஆண்டவரோட பிள்ளைகளாகிட்டோம். நாம் எல்லோரும நம் தாயாம் திருச்சபையின் பிள்ளைகள். நமக்குள்   உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் இந்த ஊர் அந்த ஊர் என்ற வேறுபாடே இருக்க கூடாது.  

கடவுளுக்கு முன்னால் நாம் எல்லோரும் ஒண்ணுதான். நமக்குள் எந்த வேறுபாடுகளும் இருக்கக்கூடாது. நாம் எதற்காக அழைக்கப்பட்டு இருக்கிறோமோ அதை செய்து முடிப்பதில் பெருமை பாராட்டுவோம். நாம் ஒவ்வொருவரும் தாயாக, தந்தையாக, கணவனாக, மனைவியாக, பிள்ளைகளாக,  துறவியராக வெவ்வேறு நிலையில்  அழைக்கப்பட்டு   இருக்கிறோம். அழைக்கப்பட்ட பணியை வேறுபாடின்றி ஒற்றுமையோடு  செய்வோம்.

தேவ ஆவியானவர் ஒருவர்தான். அவருடைய அருள் வரங்கள் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க பட்டுள்ளது. நாம் பெற்ற வரங்களை பிறரன்பில்   பயன்படுத்துவோம். பிரிவினை இல்லாத அன்பு வாழ்க்கை வாழ்வோம்.

ஜெபம்: அன்பின் ஆண்டவரே எங்களுடைய குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் நாங்கள் ஏற்ற தாழ்வு பாராது எல்லோரையுமே அன்பு செய்து வாழ வரம் தாரும். எங்களை  பலப்படுத்தும். 

Add new comment

1 + 4 =