அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

ஆண்டவர் நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மை காண்கிற இறைவன். சாராளின் பணிப்பெண் ஆகார் தன் எஜமானியின்  கொடுமை தாங்காமல் வயிற்று பிள்ளையோடு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.  ஆண்டவர்  அவளுடைய ஆதரவற்ற நிலையைப் பார்க்கிறார். தூதர் மூலம் அவளிடம் பேசுகிறார்.  வீட்டுக்கு திரும்பி சென்று உன் எஜமானிக்கு  பணிந்து நட. உனக்கு ஒரு மகன் பிறப்பான் .அவனையும் ஒரு பெரிய இனமாக்குவேன் என்கிறார். அப்பொழுது ஆகார் என்னை கன்டவரை நானும் கண்டேன். என்னை காண்கின்ற இறைவன் நீர் என்கிறார். 

எசேக்கியேல் அரசர் நோய்வைப் பட்டு மரணப் படுக்கையில் இருக்கிறார். அப்பொழுது அரசர் அழுகையோடு ஆண்டவரை நோக்கி மன்றாடுகிறார். அதற்கு ஆண்டவர் உன் கண்ணீரை கண்டேன். இதோ உன்னைக் குணப்படுத்துவேன். இன்றைக்கு மூன்றாம் நாள் நீ ஆண்டவராகிய எனது இல்லத்துக்குச் செல்வாய் என்று கூறி , அவரின் ஆயுளின் நாட்களை 15 வருடங்கள் கூட்டுகிறார். எனவே ஆண்டவர் ஏழை அபலை என்றோ, அரசன் என்றோ, வேறுபடுத்துவது இல்லை. எல்லோரையும் காண்கிற தேவனாய் இருக்கிறார். 

ஜெபம்: ஆண்டவரே, எங்களை காண்கின்ற இறைவனே,  உமது கண்கள் எங்களை பார்த்துக் கொண்டிருப்பதற்காய் உமக்கு நன்றி. எங்களுடன் இருந்து எங்களை காத்து வழி நடத்தும். எங்கள் வாழ்வு சிறப்புற ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.

Add new comment

11 + 4 =