மார்கோனியின் செபம்


Prayer Rays

ரேடியோவைக் கண்டுபிடித்த மார்க்கோனி சிறுபிள்ளையாக இருந்தபோது, தனியாக செபித்துக்கொண்டிருந்த அவருடைய தந்தையைப் பார்த்து கேலியாக சிரித்துக்கொண்டிருந்தார். அதைக் கண்ட அவருடைய தந்தை ஏன் இப்படி சிரிக்கிறாய் என்று அவரிடம் கேட்டார். அதற்கு மார்கோனி அவருடைய தந்தையிடம் சொன்னார்: “அப்பா நீங்கள் விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே என்று செபித்தீர்கள். அந்த விண்ணுலகு எங்கிருக்கிறது” என்று மீண்டும் சிரித்தார்.

அவருடைய தந்தை எதுவும் பேசாமல் தன்னுடைய கைகயை மேலே உயர்த்திக் காண்பித்தார். உடனே மார்கோனி: “நீங்க செபிக்கின்றது பக்கத்திலிருக்கும் எனக்கே கேட்கமாட்டுகிறது. அப்படியிருக்க விண்ணகத்திலிருக்கின்ற தந்தைக்கு எப்படி கேட்கும்” என்றார். அவருடைய தந்தை எந்த பதிலும் பேசவில்லை. மீண்டும் முழங்கால் படியிட்டு “ஆண்டவரே என் மகனுக்கு நீர்தாமே புரியவையும்” என்று சொல்லிவிட்டு செபித்துவிட்டு அமைதியாக சென்றார். 

மார்க்கோனி ரேடியோவைக் கண்டுபிடித்தபின் அவருக்கு அவருடைய சொந்த ஊரில் பாராட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பாராட்டு விழாவில் அவர் சொன்னார்: என்னுடைய சிறுவயதில் என் தந்தையிடம் நான் கேட்ட கேள்விக்கு ஆண்டவர் என் வழியாக எனக்கு பதில் தந்தார். 

எவ்வாறெனில் நான் இந்த ரேடியோவை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து கேட்கும்போது 320 கி.மீ தொலைவில் இருந்து ஒரு நிகழ்ச்சியை அதே நேரத்தில் இங்கிருந்து கேட்கமுடிகிறது. சாதாரண அறிவுள்ள என்னுடைய கண்டுபடிப்பு இவ்வாறு இருக்கும்போது என்னுடைய தந்தையின் செபத்தை அனைத்தையும் படைத்த கடவுள் கேட்பார் என்றார். 

கட்டாயம் உங்கள் செபத்திற்கு பதில் உண்டு. நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிருங்கள்.

Add new comment

6 + 0 =