அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; விரைவாய் எனக்குத் துணைசெய்யும். உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும் - திருப்பாடல்கள் 141:1. நம் ஆண்டவர் கூப்பிடும் குரலுக்கு பதில் கொடுக்கிற தேவன். சில நேரங்களில் நாம் எல்லாவற்றிலும் அவருக்கு ஏற்றவர்களாய் நடந்தாலும் நம் ஜெபம் கேட்கப்படாமல் இருக்கும். கவலைகொள்ளாதீர்கள். கடவுள் சில நேரங்களில் நாம் கேட்பதை  தராவிட்டாலும் நமக்கு தேவையானதை நமக்கு கண்டிப்பாக தருவார்.

இயேசு, பிதாவே இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கட்டும். ஆனால் என் சித்தப்படியல்ல உம் சித்தப்படி ஆகட்டும் என்று வேண்டினார். தன் அன்பு மகனின் வேண்டுதலை ஆண்டவர் கேட்டிருந்தால் இன்று மனுக்குலத்துக்கு மீட்பு கிடைத்திருக்காது.

மோயிசன் கடவுளோடு பேசியவர். அவருக்காக சீனாய் மலையில் காத்து இருந்தவர். ஆனால் மோயிசன் ஆண்டருடைய முகத்தை பார்த்ததில்லை. மேகம் மறைத்துக்கொள்ளும். எனவே மோயிசன் ஆண்டவரிடம் உம் முகத்தை ஒரு தடவையாவது பார்க்கணும் என்கிறார் .ஆனால் கடவுள் நான் கடந்து போகும்போது என் முதுகை பார் என்கிறார்.  

மோயீசன் இஸ்ரவேல் மக்களை கானான் தேசத்திற்கு வழி நடத்தியவர் .ஆனால் கடவுள் அவருக்கு கானானை காட்டுகிறார். ஆனால் அந்த தேசத்திற்குள் செல்ல விடவில்லை. நாமும் இறை சித்தத்திற்குத் ஒப்புகொடுப்போம்.

ஜெபம்: ஆண்டவரே நாங்கள் உம்மை நோக்கி கூப்பிடும்போது உமது சித்தப்படி எங்களை வழி நடத்தும்.

Add new comment

7 + 12 =