அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்; பாவங்களை மன்னிப்பவர்; துன்ப வேளையில் காப்பாற்றுகிறவர் - சீராக் 2:11. ஆண்டவர் மிகுந்த பரிவும் இரக்கமும் உள்ளவர்.  உண்மையாக மனம் வருந்தி அழுதால் நம் பாவங்களை மன்னித்து உருக்கமான இரக்கங்கங்களால் நம்மை சேர்த்து கொள்பவர்.  நம்முடைய துன்ப நேரங்களில் நம் அழுகுரலை கேட்டு நமக்கு இரக்கம் காட்டுபவர். 

ஆகார் வீட்டை விட்டு வெளியே வந்து தன் மகனை தூக்கி கொண்டு பாலைநிலத்தில் அலைந்து திரிகிறாள். இருந்த தண்ணீரும் தீர்ந்துவிட்டது. தன் மகன் சாகப் போவதை பார்க்க சகிக்காது தூரமாக சென்று அழுகிறாள். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன? அஞ்சாதே. ஏனெனில், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார்.நீ எழுந்து பையனைத் தூக்கி விடு. அவனை உன் கையில் பிடித்துக் கொள். ஏனெனில், அவனிடமிருந்து பெரிய இனமொன்று தோன்றச் செய்வேன்” என்றதோடு பையனின் தாகம் தீர்க்க அருகில் ஒரு கிணற்றையும் காணச் செய்கிறார். எவ்வளவு நல்ல கடவுள். 

ஜெபம்: ஆண்டவரே நாங்கள் உம்மையே பார்க்கின்றோம்.  தூபம் போல் எங்கள் ஜெபங்கள் உம்மிடம்  வருவதாக. நீரே எங்கள் வழியும் உண்மையும் உயிருமாய் இருந்து எங்களை காத்தருளும்.

Add new comment

6 + 10 =