படைப்பின் கால கொண்டாட்டத்திற்க்கான அழைப்பு 


life even in drought

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி துவங்கி, அக்டோபர் 4ம் தேதி முடிய, கிறிஸ்தவ சபைகளால் சிறப்பிக்கப்படும், படைப்பின் காலத்தை இணைந்து சிறப்பிக்க, கத்தோலிக்கர்களும் தங்களைத் தயாரிக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை.

நம் பொதுவான இல்லமான உலகை காப்பதற்குரிய நடவடிக்கை மற்றும் செபத்தை உள்ளடக்கியவண்ணம் சிறப்பிக்கப்படும் இந்த 'படைப்பின் காலம்', கிறிஸ்தவ ஒன்றிப்பின் கொண்டாட்டம் எனவும், இக்காலத்தில் இயற்கை மீது கத்தோலிக்கர்கள் கொண்டுள்ள அக்கறையை திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் இணைக்க வேண்டும் எனவும், ஜூன் 18, இச்செவ்வாயன்று, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாழ்வின் வலைத்தொடர் என்ற தலைப்பில் இவ்வாண்டு கொண்டாடப்படும் இந்த ஒருமாத 'படைப்பின் காலம்', திருத்தந்தையின் Laudato Si ஏட்டின் பரிந்துரைகளை நடைமுறைக்குக் கொண்டுவரும் முயற்சிகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் எனவும் விண்ணப்பிக்கிறது, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை.

நம் வாழ்வு முறைகளால் பத்து இலட்சம் உயிரின வகைகள் அழிவின் அச்சுறுத்தலுக்கு  உள்ளாகியிருப்பதாகக் கூறும் இவ்வறிக்கை, இந்த படைப்பின் காலக் கொண்டாட்டங்கள் முடிவுற்ற இரு நாட்களிலேயே, அதாவது அக்டோபர் மாதம் 6ம் தேதியே, அமேசான் குறித்த உலக ஆயர் மாமன்றக் கூட்டம் துவங்க உள்ளதையும் நினைவுபடுத்தியுள்ளது.

(நன்றி: வத்திக்கான் செய்தி) 

Add new comment

3 + 10 =