நம்மேல் இரக்கம் வைக்க யாரால் முடியும்?

நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, "இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கத்தத் தொடங்கினார் - மாற்கு 10:47. இயேசுவை பின் தொடர்ந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றார்கள். பர்த்திமேயு என்கிற பார்வையற்றவர் இயேசு தன்னை குணமாக்குவர் என்ற நம்பிக்கையில் "என் மீது இரங்கும்" என்று சத்தமிட்டு கூப்பிட்டார்.

அங்கு சென்றவர்கள் அவரை அமைதியாக இருக்கும்படி சொன்னார்கள். ஆனால் இயேசு அவரை அருகில் வரவழைத்து  அவனை குணமாக்கினார். நாம் ஜெபிக்கும் போது நமக்கு பதில் கிடைக்காததை வைத்து சிலர் இனி ஜெபிக்காதே என்று நம்மை அடக்குவார்கள். ஆனால் நாம் ஜெபத்தை விட்டு விடாமல் தொடர்ந்து ஆண்டவரை கூப்பிட்டு கொண்டே இருந்தோம் என்றால் ஆண்டவர் நம்மை விசாரித்து நம்முடைய குறைகளை தீர்ப்பார். நம் நோயை குணமாக்குவார். ஏற்ற நேரத்தில் ஆசீர்வாதமான மழை நம்மீது பொழிய செய்வர்.

நம் அந்தஸ்து, அழகு, படிப்பு, பதவி, எதையும் கடவுள் பார்ப்பதில்லை. நம் உள்ளத்தை பார்க்கிறார். அதனுள் இருக்கும் விசுவாசத்தை பார்க்கிறார். நாம் எப்போது கூப்பிடுவோம் என எதிர்பார்த்து காத்திருக்கிற கடவுளை இருக்கிறார். 

ஜெபம்: என் துன்ப நாளில் நான் உம்மை கூவி அழைத்த போதெல்லாம் எனக்கு மறு உத்தரவு கொடுத்து நான் அறியாததும் எனக்கு எட்டாததுமான அதிசயங்களை செய்பவரே உம்மை போற்றுகிறோம், எங்களை என்னாளும் காத்து வழிநடத்துபவரே .நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். ஆமென்.

Add new comment

6 + 11 =