உம் வார்த்தைகளுக்கு கவனமுடன்...

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார். எபிரேயர் 1:1-2: ஆண்டவர் எலியா, எலிசா, ஏசாயா, எரேமியா போன்ற பல இறைவாக்கினர் வழியாக முற்காலத்தில் பேசினார். அதன் பிறகு தன் ஒரே மகன் இயேசுவை உலகிற்கு அனுப்பி அவர் மூலமாக பேசினார். இப்பொழுதும் கூட அவரால் திருநிலைப்படுத்தப்பட்ட குருக்கள் மூலமாக ஒவ்வொரு நாளும் நம்மோடு பேசி வருகிறார். ஒவ்வொரு திருப்பலி நிறைவேற்றும் குருவும் கிருஸ்துவாக செயல் படுகிறார். அவர் சொல்லும் வார்த்தைகள் கடவுளிடமிருந்து பெறப்பட்டவை.

ஒவ்வொரு திருப்பலியும் கிருஸ்து அருளுகிறார். திருப்பலி, நற்கருணை ஆராதனை எல்லாம் சாதாரண நிகழ்வுகள் அல்ல. இயேசு கிறிஸ்து தம்முடைய உடனிருப்பை காட்டும் தெய்வீக நிகழ்வுகள். நாம் திருப்பலி ஆற்றும் குருக்களை மதிக்கப் வேண்டும். அவர் இறைவார்த்தைகளை பகிரும் போது கவனமுடன் கேட்க வேண்டும்.

அவை ஒரு மனிதனுடைய வாத்தைகள் அல்ல. அவை நமக்காக கடவுளால் தரப்பட்டவை. அவை நம் உள்ளத்தை ஊடுருவும். நம் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வரும். பரலோக பாதையில் நடத்தும். எனவே நாம் திருப்பலியில் குருக்கள் சொல்லும் வார்த்தைகளை கவனமுடன் கேட்போம். நம் பிள்ளைகளையும் வழி நடத்துவோம்.

ஜெபம்: ஆண்டவரே திருபலியை வேடிக்கையாக எண்ணிய பாவத்திற்காக மன்னிப்பு கேட்கிறோம். நாங்கள் திருப்பலியில் பக்தியோடு கலந்து கொண்டு, உம் வார்த்தைகளுக்கு கவனமுடன் செவிமடுத்து பரலோக பாதையில் நண்டக்க தூய ஆவியின் அருள் தாரும்.

Add new comment

1 + 3 =