Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
இது கடவுளின் செயலே
நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி “அப்பா, தந்தையே எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே - கலாத்தியர் 4:6-7. ஆண்டவராகிய கடவுள் உலகில் பாவம் பெருகி மக்கள் அழிந்து போவதை கண்டார். தன்னை விட்டு அவர்கள் எண்ணங்கள் தூரமாவதை கண்டார்.
காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். இவ்வாறு நாம் கடவுளின் மாட்சியை பெற்றோம். அவரின் ஆவியை பெற்றோம். எனவே தான் நாம் கடவுளை அப்பா என்று அழைக்கும் உரிமை பேருபெற்றோம். இது நம் கடவுளின் செயல். அவருடைய பிள்ளைகளாக இருப்பதே அவரது விருப்பம். எனவே அவரது அன்பில் நிலைத்திருப்போம். நாம் பெற்ற பேற்றை தங்க வைத்து கொள்வோம்.
ஜெபம்: ஆண்டவரே உம் பிள்ளைகளாக எங்களை காத்து வருபவரே உமக்கு நன்றி. இந்த அதிகாலையில் உம் கிருபையால் எங்களை நிரப்பும். உம் மகனாக மகளாக நாங்கள் இருப்பதே பெரிய ஆசீர்வாதம் என்பதை நாங்கள் ஆவியிலே உணர்ந்து என்றும் உம் விருப்பம் அறிந்து வாழ அருள் புரியும். ஆமென்.
Add new comment