அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

ஆண்டவர் நோவாவிற்குக் கூறியது: “நீ உன் குடும்பத்தார் அனைவரோடும் பேழைக்குள் செல். ஏனெனில், இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன் - தொடக்க நூல் 7:1. ஆண்டவர் அவர் அன்பு வைத்தவர்கள் மீது மிகுந்த கரிசனை காட்டுகிறார். அவர்களை இக்கட்டுகளின் போது பாதுகாப்பு கொடுத்து காக்கிறார். அவர்களுடைய இக்கட்டான நேரங்களில் ஆண்டவர் உணவு உடை தேவையான பாதுகாப்பு கொடுத்து காக்கிறார். நாம் இக்கட்டைப் பார்த்து பயப்படகூடாது. பிறர் நம்மை பார்த்து சிரித்து ஏளனமாக சிரிக்கலாம். ஆனால் நாம் சோர்ந்து போக கூடாது.

நோவா அந்த கப்பலை கட்டும்போது எல்லாரும் சிரித்தனர். கிண்டல் பண்ணினார்கள்.  ஆனால் நடந்தது என்ன? கடவுள் அந்த எள்ளி நகையாடப்பட்ட குடும்பத்தை மட்டும் காப்பற்றினார்.

அன்பு சகோதரனே சகோதரியே இந்த அதிகாலையில் ஆண்டவர் நம்மோடு பேசுகிறார். நீ அவமானப்பட நான் விடமாட்டேன். உன்னோடு நானிருந்து செய்யும் காரியங்கள் பெரியனவாய் இருக்கும் என்று சொல்கிறார். 

வேண்டுதல் வேண்டாமை இலானடி    சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

உரை: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை. கடவுளே பாதுகாப்பு கொடுப்பார்.

ஜெபம்: அன்பு ஆண்டவரே உமக்கு நன்றி . என்னையும் உமது அன்பின் பேழைக்குள் வைத்து  இந்நாள் முழுவதும்  என் வாழ் நாள் முழுவதும் பாதுகாக்க போவதற்காக உமக்கு நன்றி. இந்த அதிகாலையிலே என்னையும் என்னை சார்ந்த அனைவரையும் ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ளும். எந்த இருளும் புயலும் எங்களை தாக்காதவாறு காத்துக் கொள்ளும். உமது பிரசன்னத்தை உணர்ந்தவர்களாய் வாழ அருள் தாரும். ஆமென்.

Add new comment

7 + 2 =