அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார் - மாற்கு 1:34. இயேசு இறைமகன். அவர் அதிகாலையில் கருக்கலோடு எழுந்து தனிமையான இடத்து க்குபோய் தந்தையிடம் வேண்டினார். அதன் மூலம் மனுக்குல மீட்புக்கு தேவையான சக்தியை பெற்று கொண்டார்.

மோயிசன் இஸ்ரேல் மக்களை வழி நடத்தி வந்த மாபெரும் தலைவர். அவர் சீனாய் மலையில் மேல் ஏறி தனிமையான இடத்தில் ஆண்டவரோடு பேசி இஸ்ரேல் மக்களை நடத்தி செல்ல வேண்டிய சக்தியை ஏற்று கொண்டார். தாவீது பெரிய ராஜா. அவர் அந்தி சந்தி மத்தியான வேளையில் ஆண்டவரை தொழுது தன் மக்களை நல்லபடி ஆள கூடிய அறிவையும், சவுல் ராஜாவிடமிருந்து தன்னுயிரை காப்பாற்றி கொள்ளும் வழியையும் அறிந்தார்.

தானியேல் அரச பிரதிநிதி. அவர் மூன்று வேளையும் ஆண்டவரை துதித்ததால் தான் நெருப்பு சூளையிருந்தும் சிங்கத்தின் குகையில் இருந்தும் உயிர் பிழைத்தார். இவர்கள் சும்மா இருக்கவில்லை. ரொம்ப பிசியாகவே இருந்தாலும் கூட ஜெபித்து ஆண்டவரின் வல்லமையை பெற்று கொண்டு தங்கள் பணிகளை செய்தார்கள். 

இப்பொழுது,  வேலைக்கு செல்லும் பெரியவர்களுக்கு ஜெபிக்க நேரமில்லை. பள்ளி செல்லும் குழந்தைளுக்கு ஜெபிக்க நேரமில்லை. அன்பு சகோதரமே ஜெபிப்போம் ஜெயம் காண்போம். ஆண்டவர் நாம் அவரோடு பேசும் போது , என் பிள்ளை இன்று என்னோடு பேசினான் என்று சந்தோஷப்படுவார். 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

ஜெபம்: ஆண்டவரே உம்மை தேடாமல் உலக காரியங்களில் அதிக கவனம் செலுத்திவிட்டோம். எங்களை மன்னியும். ஒவ்வொரு நாளும் உம்மை தேடி உம் சமூகத்தில் அமர்ந்து இன்னும் பெலன் பெற அருள் தாரும்.

Add new comment

2 + 0 =