Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Morning Prayer
ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள் - மத்தேயு 15:36. ஆண்டவர் இயேசு அப்பத்தை எடுத்து வான் நோக்கி பார்த்து தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்தி பின்னர் அதை சீடர்களிடம் கொடுத்து மக்களுக்கு பரிமாற சொல்கிறார். நடந்தது என்ன அந்த உணவு எல்லோரும் உண்ணும் அளவுக்கு போதுமானதாக மாறியது. பெண்கள் குழந்தைகள் நீங்கலாக ஆண்கள் மட்டும் 4000 பேர் சாப்பிட்டு போக 7 கூடை நிறைய மீதி எடுத்தனர். இதே போன்று 5 அப்பத்தை பலுக செய்த போதும் இயேசு விண்ணக தந்தையை நோக்கி ஜெபித்தார்.
இயேசுவே, ஜெபித்தார் என்றால், நாமும் உணவு உண்ணும் முன் ஒரு நிமிடமாவது ஜெபிக்க வேண்டும். அந்த உணவை தந்த இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். வான் மழையை கொடுத்தற்காக நன்றி சொல்லுவோம். அந்த உணவை உருவாக்கிய கரங்களுக்காக வேண்டுவோம். அதற்கு மூல காரணமாய் இருந்த விவசாயிகளையும் அவர்கள் குடும்பங்களையும் கடவுள் ஆசிர்வதிக்க ஜெபிப்போம். நமக்கு அந்த அன்றாட உணவு கிடக்க வேண்டும் என்று ஜெபிப்போம். பஞ்சம் நிலவும் நாடுகளில் பஞ்சம் நீங்கி போதுமான உணவு எல்லோருக்கும் கிடைக்க வேண்டி ஜெபிப்போம் நாம்.
ஜெபம்: ஆண்டவரே வான் மழையை பெய்ய பயிர்களை பாதுகாத்து விவசாயிகளின் உதவியோடு அவற்றை எங்களுக்கு கொடுத்த இறைவா உமக்கு நன்றி. விவசாய குடும்பங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். அவர்கள் வாழ்வில் நிறைவு காண செய்யும். ஆமென்.
Add new comment