அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்; அறிவேன் அதனை; நீர் நினைத்த எதையும் தடுக்க இயலாது - யோபு  42:2. நம் ஆண்டவர் செய்ய நினைப்பதை யாராலும் தடுக்க இயலாது.  எதையும் செய்யும் வல்லமை உள்ளவர். தீர்க்கதரிசி யோனாவை ஆண்டவர் நினிவேவுக்கு போய் அங்குள்ள மக்கள் பாவத்தில் அழிந்து விடாமல் மீட்கும்படி சொல்றார். ஆனால் யோனாவோ அங்கு செல்ல விரும்பாது கப்பல் ஏறி தர்சீஸ் போறார். ஆண்டவருடைய திட்டத்துக்கு தடை ஏற்படுத்துகிறார் யோனா.

ஆனால் ஆண்டவர் கடலில் பெரும் புயல் காற்றை எழும்ப செய்து , கப்பலை அலகளித்து யோனாவை கடலில் தூக்கி போடவைக்கிறார். பெரிய மீன் அவரை விழுங்குகிறது. மூன்று நாட்கள் சாகாமல் உயிரோடு மீனின் வயிற்றில் யோனா இருக்கிறார். மூன்று நாளைக்கு பிறகு  மீன் யோனாவை நினிவே கடல்கரையில் கொண்டு வந்து கக்குகிறது. 

அதன்பின் ஆண்டவர் தான் நினைத்தபடியே யோனா மூலமாகவே நினிவே மக்களுக்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு மன்னரும் மக்களும் தவமிருந்து மனம் திரும்புகின்றனர். ஆண்டவர் செய்ய நினைத்ததை எப்படியும் செய்து முடிப்பார்.

ஜெபம்: ஆண்டவரே நீர் சகலத்தையும் நிறைவேற்ற வல்லவர். நீர் நினைத்தது ஒருபோதும் தடைபடாது என்பதை உணர்ந்து உம் வார்த்தைக்கு கீழ்படிந்து வாழ எங்களுக்கு பலத்தையும் சக்தியையும் தாரும்.  தூய ஆவியானவரின் அருள் தாரும்.
 

Add new comment

3 + 7 =