அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

அன்பின் ஆண்டவரே உமக்கு நன்றி. அதிகாலையில் வேளையில் எங்களை தொட்டு தொட்டு எழுப்பி புத்துயிர் தந்ததற்காக உமக்கு நன்றி. ஆண்டவரே இன்றைய நாளில் எங்களை தொடும். உமது அபிஷேகத்தாலே எங்களை நிரப்பும். ஆண்டவரே அப்போஸ்தலர்களை தொட்டதாலே அவர்கள் உம்மை பின்பற்றினார்கள். உமது வல்லமையை பெற்றுக்கொள்ள உமது ஆவியால் எங்களையும் தொடும். உமது ஞானத்தை பெற்று கொள்ள எங்களை தொடும்.  

ஆண்டவரே கானவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை ரசமாக்கியவரே, எங்கள் கல்வி, தொழில், வேலை இவற்றில் நாங்கள் முன்னேற்றம் காண எங்களை தொடும் ஆண்டவரே. இயேசுவே நீர் தொட்டதினால் எத்தனையோ பேர் பாவத்திலிருந்து விடுதலை பெற்றனரே நாங்கள் அமைதியாக வாழ எங்களை தொடும். உமக்கு ஏற்ற இறைப்பிரசன்ன வாழ்வு வாழ எங்கள் ஆத்துமாவை தொடும் ஆண்டவரே. 

நீர் தொட்டதால் அநேகம் பேர் பிணிகளிருந்து விடுதலை பெற்றார்களே. எங்கள் நோய்களிலிருந்து விடுதலை பெற்று புதுவாழ்வு பெற எங்களை தொடும் ஆண்டவரே. இறந்து போன லாசரை உயித்தெழ செய்தவரே, எங்களையும் பாவத்திலிருந்து சாபத்திலிருந்து, கடன் தொல்லைகளிருந்து மீண்டு எழுந்து வர செய்யும். உம் அன்பை நாங்கள் சுவைக்க செய்யும். ஆண்டவரே எங்கள் பலவீனங்களில் நீர் எங்களை தொட்டு உமது கிருபையால் எங்களை நிரப்பும் ஆண்டவரே. தனிமையான எங்கள் நேரங்கள், எனக்கென யாரும் இல்லையே என நாங்கள் தவிக்கும் நேரங்களில் எங்களை தொட்டு  ஆறுதல் படுத்தும் இயேசுவே. 

ஆண்டவரே உம்மை காண்பதற்காக எங்கள் கண்களை தொடும். உம்குரல் கேட்பதற்காக எங்கள் காதுகளை தொடும்.  உம் பணி செய்வதற்காக எங்கள் கைகளை தொடும். உம்வழி நடப்பதற்கு காலகளை தொடும். பிறரை அன்பு செய்வதற்காக எங்கள் இதயத்தை தொடும். உம்மையே நினைப்பதற்காக எங்கள் சிந்தையை தொடும் ஆண்டவரே. இன்றைய நாள் முழுவதும் எங்களோடு இருந்து எங்களுக்கு தாயாக தந்தையாக நண்பனாக எங்களுக்கு எல்லாமாக இருந்து எங்களை காத்தருளும்.

Add new comment

5 + 1 =