Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer
உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார் - மாற்கு 5:30. பன்னிரண்டு ஆண்டுகளாக நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு அம்மா இயேசுவுக்கே தெரியாமலே இயேசுவை தொட்டு சுகமாயிடனும் என்ற எண்ணத்தோடு வருகிறார்.
அந்த அம்மா பகிரங்கம்மாக எல்லார் முன்னிலையிலும் தன் நோயை பற்றி சொல்ல முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் தீட்டுள்ள பெண்கள் ஒதுங்கி இருங்கணும் வெளிய வரக்கூடாது. அவர் இயேசுவிடம் சொல்லியிருந்தால் அங்கிருந்த மக்கள் அந்த அம்மாவை அடித்து கொன்றிருப்பார்கள். அப்படிப்பட்ட காலம் அது.
அதனால் தான் அவர் எதுவும் சொல்ல பயந்து கூட்டத்தோடு போய் இயேசுவினுடைய உடுப்பையாவது தொட்டால் சுகம் கிடைக்கும் என்று தொடுகிறார். அவருடைய நம்பிக்கையை பார்க்கவேண்டும். கூட்ட நெரிசலில் எப்படியாவது தொடனும். சுகம் பெறனும் என்கின்ற நினைப்பு அவர்களுக்கு. ஆனால் இயேசு தான் செய்த புதுமையை வெளிப்படுத்த அல்ல,அந்த அம்மாவின் நம்பிக்கையை வெளிபடுத்த விரும்புகிறார். உடனே என்னை தொட்டது யார். என்னிடமிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்தேன் என்கிறார்.
அந்த கூட்டத்திலும் அத்தனை நெருசலிலும் இயேசு அந்த அம்மாவுடைய மனதை நம்பிக்கையை பார்க்கிறார். அமைதியாக போ என்கிறார். அந்த பெண் இயேசுவை தொட்டாதால் அவருக்கு நோயிலிருந்து விடுதலையும் சமூகத்தில் அங்கீகாரமும், இயேசு கொடுத்த சமாதான வாழ்வும் கிடைத்தது. எத்தனைபேர் இருந்தாலும் நம் உள்ளத்தின் ஆழத்தை அறிகிற இறைவனை பற்றிக் கொள்வோம்.
ஜெபம்: ஆண்டவரே எங்கள் உள்ளங்களை அறிந்திருப்பவரே உமக்கு நன்றி. நீர் எங்களை தொட்டாலும் நாங்கள் உம்மை தொட்டாலும் எங்களுக்கு நன்மை உண்டாகும் என்பதை உணர்ந்து உம்மை பற்றி கொண்டு வாழும் மனதை எங்களுக்கு தாரும்.
Add new comment