அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார் - லூக்கா 5:8. இயேசு சொன்னபடி வலையை போட்டதும் வலை கிழியும் அளவுக்கு இரண்டு படகு நிறைய மீன் பிடித்தார்கள்.  இதை பார்த்ததும் சீமோன் மிகுந்த சந்தோசப்பட்டிருக்கணும். இவ்வளவு பெரிய அற்புதம் செய்கிறவர் தன்னோடு பேசினார். தன் படகில் ஏறினார் என்று பெருமை பட்டிருக்கணும். இவரை வைத்தே நிறைய சாதிக்கலாம் என்று நினைத்து இருக்கணும். ஆனால் அவர் தன் பாவ நிலையை உணர்கிறார்.  ஆண்டவரே நான் பாவி நீர் என்னை விட்டு போய் விடும் என மனம் கூசி தன் உண்மை நிலையை ஆண்டவரிடம் ஒப்பு கொள்கிறார்.  தன்னை தாழ்த்துக்கிறார். 

ஆண்டவர் அவரை உயார்த்துகிறார். இன்று முதல் உன்னை மனிதரை பிடிப்போர் ஆக்குவேன் என்கிறார். பின்னாளில் நீ என் பாறை இந்த பாறையின் மேல் என் திருச்சபையை கட்டுவேன் என்று அவரையே திருச்சபையின் தலைவராக ஆக்குகிறார். ஆம். நாமும் நம் பாவ நிலையை ஆண்டவரிடம் ஒப்பு கொள்வோம். அவருடைய அருள் வரங்களை, இறையழைப்புகளை  பெற தடையாக இருப்பவற்றை அவரிடம் கூறுவோம். 

ஜெபம்: ஆண்டவரே  நான் பாவி என்னை மன்னியும்.  உம் பிரசன்னத்தை எனக்கு தாரும். உமது உடனிருப்பை எனக்கு காட்டும். வழி நடத்தும்.
 

Add new comment

7 + 11 =