அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது.  அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது - யோவான் 1:1. அந்த வார்த்தையால்தான் உலகிலுள்ள அனைத்தும் உருவாகின.  "உண்டாகட்டும் " என்ற ஒரே வார்த்தை.  அன்னை மரியாளின் உமது சித்தப்படி ஆகட்டும் என்ற வார்த்தையால்தான் மனுக்குலத்திற்கு மீட்பு கிடைத்தது.

சிந்தனை: நான் நமது வார்த்தையை எப்படி பயன்படுத்துகிறோம். நான் நம் குடும்பத்தில் பிறர் தவறு செய்தால் அவர்களை சபிக்கிறோமா?  இல்லை அவர்களுக்கு ஆலோசனை வழங்கி ஆசி கூறுகிறோமா?  

செபம்: ஆண்டவரே நாங்கள் வார்த்தைகளை நல்ல விதத்தில் பயன் படுத்த அருள்தாரும்.

Add new comment

10 + 1 =