அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார் - 1 பேதுரு 5:7. ஆண்டவர் நாம் தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே நம் நினைவுகளையும் தேவைகளையும் அறிந்திருக்கிறார். நம் நினைவுகளை தூரத்திலிருந்து அறிந்திருக்கிறார். எனவே அவர் நமக்காக கவலைப்படுகின்ற  தேவன். 

சிந்தனை: நாம் தேவை இல்லாததற்கெல்லாம் கவலைப் படுகிறோமா? இல்லை ஆண்டவர் எனக்காக எல்லாம் செய்து முடிப்பார் என்று நம்புகிறோமா?

செபம்: ஆண்டவரே உம்மீது நம்பிக்கை கொண்டு எங்கள் கவலைகளை மறந்து வாழ வரம் தாரும்.

Add new comment

5 + 3 =