நிழலாக

வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.

லூக்கா 1-35.

மரியன்னை மாசு இல்லாதவர். அருள் நிறைந்தவர்.  தூயவர்.  ஆண்டவருடைய தூதர் அவரிடம் வரும் போது அன்னை ஜெபித்து கொண்டு இருந்தார்.  மரியாள் தூதரின் வார்த்தையை கேட்டு ஆர்பாட்டம் செய்ய வில்லை. அமைதியாக இது எப்படி நடக்கும். நான் கன்னி ஆயிற்றே என்றார். பரிசுத்த ஆவி உம் மீது நிழலிடும் என்று சொன்னதும், இதோ நான் ஆண்டவருடைய அடிமை என்று தன்னை முழுவதுமாக ஒப்பு கொடுக்கிறாள். 

அன்னையின் தாழ்ச்சிக்கு ஈடு உண்டா?.. அவரது அமைதிக்கு ஒப்பு உண்டா?  பேரருள் உடையவர் ஆகிய அவரிடம் தற்பெருமை இருந்ததா?. ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை கண்டு அன்னையின் உள்ளம் மகிழ்ந்து பாடியது. 

ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.

ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.

ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்”

ஆமென்

 

Add new comment

1 + 3 =